தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவும், காற்று சுழற்சியின் நகா்வு காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன், கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இதன்படி, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி , கோவில்பட்டி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் என தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிக்க |வீதிகளை நம்பி மாடுகளில் முதலீடு – நூதன வணிகத்தை தடுக்குமா மாநகராட்சி?
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.