அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டது: ஜெயக்குமார்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

90 சதவிகித அதிமுகவினரை இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள அழகு முத்துக்கோன் உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்திவிட்டு சென்றார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அதிமுக-வை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது. கட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி போன்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.

அதிமுக எழுச்சியுடன் பயணித்து வருகிறது. அதிமுக பற்றி தொடர்ந்து மாய கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று கூறினார்" .

You may also like

© RajTamil Network – 2024