Saturday, September 21, 2024

அந்த 2 விஷயங்களில் விராட் கோலிக்கு இணை யாருமில்லை – ரோகித் சர்மா பாராட்டு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அழுத்தமான சூழ்நிலையில் விராட் கோலி அசத்தக்கூடியவர் என்று ரோகித் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நேற்று (ஆகஸ்ட் 18-ம் தேதி) சர்வதேச கிரிக்கெட்டில் தனது 16-வது ஆண்டை நிறைவு செய்தார். அதனால் அவருக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் வெற்றிக்கான பசி மற்றும் ஆர்வம் ஆகியவற்றை யாராலும் பொருத்த முடியாது என கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். அத்துடன் அவர் பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றிகளை மார்க்கெட்டில் வாங்க முடியாது என்றும் ரோகித் பாராட்டியுள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு அழுத்தமான சூழ்நிலையில் விராட் கோலி அசத்தக்கூடியவர் என்று ரோகித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"அவருடைய வேட்கை மற்றும் ஆர்வம் முடியாதது என்பதை நாம் அறிவோம். அவர் அனைத்து நேரமும் களத்திற்கு வித்தியாசமான எனர்ஜியுடன் வருவதை நீங்கள் பார்ப்பீர்கள். அவரால் அணிக்காக பல்வேறு விஷயங்களை கொண்டு வர முடியும். இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள அவரிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது. இவற்றை உங்களால் மார்க்கெட்டுக்கு சென்று வாங்க முடியாது. அது தடுமாற்றம் மற்றும் கடினமான சூழ்நிலைகளில்தான் வெளிப்படும். அவற்றை செய்த விராட் கோலியை நான் வாழ்த்துகிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய ஆட்டம் வித்தியாசமான லெவலில் இருப்பதை நாம் பார்த்து வருகிறோம்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024