Saturday, October 12, 2024

அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் சிறப்பான ஆட்டம்: பேட் கம்மின்ஸுக்கு பாக். முன்னாள் வீரர் பாராட்டு!

by rajtamil
Published: Updated: 0 comment 2 views
A+A-
Reset

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா, நிதீஷ் குமார் ஆகியோர் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இவர்களின் சிறப்பான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தில்லியின் அருண் ஜேட்லி மைதானத்தில் புதன்கிழமை நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் 42 ரன்னுக்கு இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

இதனால் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் வென்றது. 136.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிதீஷ் குமார் அதிரடியாக ரன்களை குவித்தார். 34 பந்துகளில் 74 ரன்களில் ஆட்டமிழந்த அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் குறித்து தனது யூடியூப் சேனலில் பாராட்டி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, “ நிதீஷ் குமார் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

இவர்களது சிறப்பான ஆட்டத்தில் கம்மின்ஸுக்கு பங்கு இல்லை என்று கூறாமல் இருக்க முடியாது. நிதீஷ் குமாரையும், அபிஷேக் சர்மாவையும் கம்மின்ஸ் ஆதரித்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்” என்று தெவித்துள்ளார்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. நிதீஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024