அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன.

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.

You may also like

© RajTamil Network – 2024