Monday, September 23, 2024

அமைச்சா் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1996-2001-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ. 1.36 கோடிக்கு சொத்து குவித்ததாக, கடந்த 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சா் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீா்ப்பளித்தது.

இதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடிக்கு எதிரான வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024