Monday, October 14, 2024

அரபிக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின்தான் பொறுப்பு: இபிஎஸ்

லட்ச தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 9-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதனிடையே, தென் தமிழகத்தின் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024