அறநிலைய துறை உதவி ஆணையர் தேர்வு முடிவு வெளியானது

அறநிலைய துறை உதவி ஆணையர் தேர்வு முடிவு வெளியானது

சென்னை: டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவியில் 21 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 219 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், தமிழ்நாடுபொதுப்பணியில் அடங்கியசுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதன்மைத் தேர்வு கடந்த ஜுன் 6 மற்றும் 11-ம்தேதி நடந்தது. இதில், நேர்முகத்தேர்வுக்கு 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு