அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதனால், வீட்டில் இருந்த இருமல் டானிக்கை கொடுத்ததாக தெரிகிறது.

மதுரை,

மதுரை தபால்தந்தி நகர் பாமாநகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவருடைய மனைவி சடையீஸ்வரி. இவர்களுக்கு, 4 வயதில் சிவரஞ்சனி என்ற மகளும், 9 மாதத்தில் சிவதாரணி என்ற மகளும் இருந்தனர். கடந்த 2 நாட்களாக சிறுமி சிவரஞ்சனிக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இருப்பினும் தொடர்ந்து சிறுமிக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதனால், வீட்டில் இருந்த இருமல் டானிக்கை சிறுமிக்கு கொடுத்ததாக தெரிகிறது. குணமடையாததால், சிறுமியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது வரும் வழியில் சிறுமி இறந்தது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024