அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அவிநாசி: அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள்கள் அபர்ணா (26). சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்-இல் 2-ம் ஆண்டு எம்.பி.ஏ., படித்து வருகிறார். அவரது இளைய மகள் ஹேமா (21). கோவை தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். மேலும் கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த மோனிஷ் பாபு (28). இவர்கள் 3 பேரும் காரில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க |இந்திய பணியாளா்களுக்கு விசா 4 மடங்கு அதிகரிப்பு: ஜொ்மனி முடிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அபர்ணா, ஹேமா, காரை ஒட்டி வந்த மோனிஷ் பாபு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநர் கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024