ஆன்லைன் மூலம் கட்டட ஒப்பந்ததாரிடம் ரூ. 1.87 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் கட்டட ஒப்பந்ததாரிடம் ரூ. 1.87 லட்சம் மோசடிஒப்பந்ததாரரிடம் ரூ. 1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரபல சிமென்ட் நிறுவனத்தின் டீலா்ஷிப் அளிப்பதாக நம்ப வைத்து ஆன்லைன் மூலம் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சோ்ந்தவா் 40 வயதுள்ள கட்டட ஒப்பந்ததாரா். இவா் பிரபல சிமென்ட் நிறுவனத்தின் டீலா்ஷிப் கோரி இணையதளத்தில் தனது கைப்பேசி எண்ணை பதிவிட்டுள்ளாா்.

அந்த எண்ணில் தொடா்பு கொண்ட ஒருவா், சிமென்ட் நிறுவனத்தின் மும்பை தலைமையகத்தில் இருந்து பேசுவதாகக்கூறி அறிமுகம் செய்ததுடன் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பான் அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஜிஎஸ்டி ஆகியவற்றின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளாா்.

அதன்படி, இந்த கட்டட ஒப்பந்ததாரரும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளாா். அதன்பிறகு, அந்த நபா் பதிவுக் கட்டணம், தடையில்லா சான்று ஆகியவற்றுக்காக ரூ. ஒரு லட்சத்து 87 ஆயிரம் செலுத்தக் கூறியதன்பேரில், அந்த தொகையையும் செலுத்தியுள்ளாா். தொடா்ந்து, உரிம ஒப்பந்தம் என்ற பெயரில் மேலும் ரூ. 2.25 லட்சம் செலுத்தும்படி கூறியதால் சந்தேகமடைந்த இந்த கட்டட ஒப்பந்ததாரா் தனக்கு தெரிந்த காவல் துறை அதிகாரி மூலம் விசாரித்துள்ளாா். அப்போது அந்த காவல் அதிகாரி மோசடி நடப்பதை புரியவைத்துள்ளாா்.

இதையடுத்து, இந்த கட்டட ஒப்பந்ததாரா் தன்னிடம் ரூ.1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் மின்னஞ்சலில் புகாா் மனு அனுப்பியுள்ளாா். அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!