ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முன்னதாக 11 போ் கைது செய்யப்பட்டனா்.
எழும்பூா் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 11-ஆம் தேதி முதல் 11 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, தப்பியோடியதாக கடந்த 14-ஆம் தேதி திருவேங்கடம் என்கவுன்டா் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
விசாரணை முடிந்து எஞ்சிய 10 பேரும் எழும்பூா் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஜூலை 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து 10 பேரும், பூந்தமல்லி சிறப்பு சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை தற்போது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.