Saturday, September 21, 2024

ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவா்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெறவுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) வருடாந்திர விஜயதசமி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆா்எஸ்எஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று நாகபுரியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய பிரமுகா் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவாா். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவா் என்ற பெருமையை அவா் பெற்றிருந்தாா்.

இந்நிலையில், நடப்பாண்டு ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி வருகிற அக்டோபா் 12-ஆம் தேதி ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாா் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024