Monday, September 23, 2024

இது காத்து வாக்குல 3… கணவருக்கு கல்யாணம் செய்து வைத்த மனைவிகள்…

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

இது காத்து வாக்குல 3… கணவருக்கு கல்யாணம் செய்து வைத்த மனைவிகள்…காத்து வாக்குல 2 இல்ல இது 3... கணவருக்கு கல்யாணம் பண்ணிய மனைவிகள்...

காத்து வாக்குல 2 இல்ல இது 3… கணவருக்கு கல்யாணம் பண்ணிய மனைவிகள்…

பெண்கள் தன் கணவனிடம் மற்ற பெண்கள் பேசுவதைக்கூட ஏற்க மாட்டார்கள். ஆனால் ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரின் வாழ்க்கையை அவரது வாழ்க்கைத் துணையாக பகிர்ந்து கொள்ள மேலும் இரண்டு பெண்கள் அனுமதி அளித்து வரவேற்பும் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குல்லேலு கிராமத்தைச் சேர்ந்த சகேனி பாண்டண்ணா 2000ஆம் ஆண்டு பர்வதம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பர்வதம்மாவின் ஒப்புதலுடன் அப்பாலம்மா என்ற பெண்ணை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனவுடனேயே சகேனி பாண்டண்ணா – பர்வதம்மா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

விளம்பரம்

இரண்டு மனைவிகள், மகனுடன் வாழ்ந்து வந்த பாண்டனா , இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதனால் மேலும் ஒரு திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது இரண்டு மனைவிகளும் தங்கள் கணவருக்கு மூன்றாவது முறையாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையும் படிங்க: திருநெல்வேலியில் உலா வரும் நியூ ஜென் பஸ்… டீசல் பேருந்துக்கு மாற்றாகப் புது வழி…

மேலும் ஜி.மாடுகுள மண்டலம் கில்லம்கோட்டா கிராமத்தில் உள்ள பந்தவீதியில் வசிக்கும் லவ்யா என்ற லக்ஷ்மி என்ற பெண்ணை தான் விரும்புவதாக பாண்டனா தனது இரண்டு மனைவிகளிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட பர்வதம்மாவும், அப்பாலம்மாவும் தனிப்பட்ட முறையில் மணமகள் வீட்டிற்குச் சென்று திருமணத்தைப் பற்றி பேசினர்.

விளம்பரம்

லாவ்யாவும், அவரது பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். பாண்டண்ணாவின் இரண்டு மனைவிகள் தங்கள் கணவரின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து தங்கள் பெயரில் திருமண அட்டைகள் மற்றும் ஃப்ளெக்ஸ்களை அச்சிட்டனர். அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

ஜூன் 25, 2024 அன்று, மணமகளின் வீட்டில் இரு வீட்டாரும் – லாவ்யாவின் உறவினர்கள் மற்றும் பாண்டனாவின் ஏற்கனவே இருக்கும் மனைவிகள் மற்றும் மகன் உட்பட பாண்டனாவின் பெரிய குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தற்போது வைரலாகி வரும் நிலையில் பாண்டனா தனது மூன்று மனைவிகள் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

விளம்பரம்

இதையும் படிங்க: கண் திருஷ்டி மட்டுமல்ல கை கண்ட மருந்து இது தான்… ஆகாயத்தில் வளரும் கிழங்கின் சிறப்பு…

இதுகுறித்து தகவல் அளித்த கில்ம்கோட்டா கிராமவாசிகளின் பாண்டனா தினசரி கூலி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு விவசாய நிலம் உள்ளதாகவும், விவசாய பணிகளில் அவருடன் அவரது மனைவிகளும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த “பர்வதம்மாவும், அப்பாலம்மாவும் இதில் என்ன தவறு உள்ளது? நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையை பாண்டனாவுடன் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கணவர் லாவ்யாவை விரும்பினார், அவரது விருப்படி திருமணம் செய்து வந்தோம் என இயல்பாக கூறுகின்றனர்.

விளம்பரம்

“இந்து திருமணச் சட்டம், 1954 இன் படி, பாண்டன்னாவின் முதல் மனைவி மற்ற இருவர் மீது புகார் அளிக்காத வரையில், பாண்டன்னா திருமணங்கள் சட்டவிரோதமானதாக இருக்காது. எனவே இந்த திருமணம் முதல் இரண்டு மனைவிகள் சம்மதத்துடன் நடந்ததால் எந்தவித பிரச்சனையும் வர வாய்ப்புகள் இல்லை. இதுகுறித்து விளக்கும் வழக்கறிஞர் அப்துஸ் சலீம் இவர்களது திருமணம் சட்டப்பூர்வமானது தான் என தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Husband Wife
,
Local News
,
marriage

You may also like

© RajTamil Network – 2024