Monkey Pox: இந்தியாவிற்குள் நுழைந்தது குரங்கு அம்மை.. ஒருவருக்கு தொற்று உறுதி : மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து, குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்தது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை குரங்கு அம்மையின் அறிகுறிகள் ஆகும். தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமாணியன் தெரிவித்திருந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது.
விளம்பரம்
Also Read:
விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு.. காவல்துறை வைத்த 33 நிபந்தனைகள் என்னென்ன?
இந்தநிலையில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒரு இளைஞருக்கு, தற்போது குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால் அவரி பரிசோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் உடலில் அதிக அளவு யூரிக் அமிலம் இருந்தால் ஏற்படும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்.!
மேலும் செய்திகள்…
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்று பாதித்த நாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று அறிகுறி காணப்பட்ட நிலையில் அது இன்று உறுதியாகியுள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள வகைப்பாட்டை சேர்ந்தது இல்லை என்று விளக்கமளித்துள்ளது. மேலும் அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளம்பரம்
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
central government
,
Monkeypox