Saturday, September 21, 2024

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20: டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பல்லகெலே,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து 7.40 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024