Saturday, September 21, 2024

‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை – நிதிஷ் குமார்

by rajtamil
0 comment 39 views
A+A-
Reset

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது;-

"பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தொடர்ந்து வளர்ச்சியடையும். இந்த முறை வெற்றி பெற்ற எதிர்கட்சிகள் அடுத்த முறை நிச்சயம் தோல்வியடைவார்கள். 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024