இந்தியா-சீனா இடையே நேரடி விமான போக்குவரத்தை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புதுடெல்லி,

கொரோனா காலகட்டத்தின்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், சிவில் விமான போக்குவரத்து துறையில் இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாடுகளுக்கிடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மந்திரி மாநாட்டின்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர், சீனாவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட ராம்மோகன் நாயுடு "இரு நாடுகளுக்கிடையிலான சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை விரைவாக தொடங்குதல் ஆகியவை தொடர்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024