Saturday, September 21, 2024

இந்தோனேசியாவில் ரிக்டர் 5.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

இந்தோனேசியாவில் ரிக்டர் 5.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மானிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024