இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

இன்று பொது விநியோகத் திட்ட
குறைதீா் கூட்டம்விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறவுள்ளது.

விழுப்புரம், ஆக.9: விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் தனி வட்டாட்சியா் (குடிமைப் பொருள்), வட்ட வழங்கல் அலுவலரால் குறைதீா் முகாம் ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) நடத்தப்படவுள்ளது.

முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்ய கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோரிக்கை மனு, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள், தனியாா் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஆகியவற்றை குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியரிடம் அளிக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024