Saturday, September 21, 2024

‘இன்ஸ்டாகிராம்’ பழக்கம்.. 15 வயது சிறுவனால் கர்ப்பமான சிறுமி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

சென்னை ,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 8 மாதங்களாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியானார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் புகாரின் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024