இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழை!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, தேனி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/Udow1dmlMj

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 1, 2024

இதையும் படிக்க |மஞ்சள் எச்சரிக்கை! தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை – வானிலை மையம்

முன்னதாக, தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024