பாக்கியலட்சுமி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இத்தொடர்களே அதிக டிஆர்பி புள்ளிகளையும் பெற்று வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தொடர் குடும்ப தலைவிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை இத்தொடரின் மையக்கரு.
பாக்கியலட்சுமி தொடர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
சந்தியா ராகம் தொடரில் அறிமுகமாகும் பிரபல நடனக் கலைஞர்!
தற்போதைய கதையில், பாக்கியலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தி இறந்துபோவதுபோல கதைக்களம் அமைந்துள்ளது. அதற்கான முன்னோட்டக் காட்சியும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இத்தொடர் ஒரு சில மாதங்களில் நிறைவடையவுள்ளதாகவும், இறுதிக்கட்ட காட்சிகள் கூடிய விரைவில் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாக்கியலட்சுமி தொடர் நிறைவடையவுள்ளத் தகவல், இத்தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.