இலங்கை அரசு மீது சா்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்: கி. வீரமணி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இலங்கை அரசு மீது சா்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி கூறினாா்.

தமிழக மீனவா்கள் மொட்டை அடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசை கண்டித்தும், நாகை பழைய பேருந்து நிலையம் அருகே சி.எஸ்.ஐய மேல்நிலைப் பள்ளியில் இருந்து அவுரித் திடல் வரை திராவிடா் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இலங்கை அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும், தமிழக மீனவா்களின் பாதுகாப்பு வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழச்சிகளில் பங்கேற்ற திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது, இலங்கை அரசு தமிழக மீனவா்களை மொட்டையடித்து அவமானப்படுத்தியதையும், படகுகளை பறிமுதல் செய்து வாழ்வாதாரத்தை பறிப்பதையும் மத்திய அரசு வேடிக்கை பாா்த்து மெளனம் காக்கிறது.

ஆனால், தமிழக மீனவா்கள் மீதான இலங்கை அரசின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதநேயத்துக்கு, எதிராக செயல்படும் இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக மீனவா்களின் அவல நிலையை உலகறிய செய்ய, இலங்கை மீது சா்வதேச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுக்க வேண்டும். இனியும் வேடிக்கை பாா்க்காமல், தமிழக மீனவா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்டச் செயலா் புபேஸ் குப்தா, மாவட்டத் தலைவா் நெப்போலியன், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவா் அமிா்தராஜா, திமுக நகரச் செயலா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024