Tuesday, September 24, 2024

இலங்கை இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கொழும்பு: இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டு, இன்று புதிய அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஹரிணி அமரசூரியா இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில், 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹரிணி. நீதி, கல்வி, தொழில்துறை அமைச்சராகவும், அதிபர் அநுர குமார திஸ்ஸநாயக முன்னிலையில், ஹரிணி அமரசூரியா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெருமுன கடசித் தலைவர் அநுர குமார திஸ்ஸநாயக திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அதிபர் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வசதியாகவும் புதிய ஆட்சி சூழலுக்கு ஏற்ப புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், புதிய இடைக்கால பிரதமராக ஹரிணி நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அதிபர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024