இஷான் கிஷன் சதம்! இந்தியா சி அணி 357 ரன்கள் குவிப்பு!

by rajtamil
Published: Updated: 0 comment 16 views
A+A-
Reset

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் விளையாடுகின்றன. ஏ அணிக்கு ஷுப்மன் கில் ( தற்போது மயங்க் அகர்வால்) , பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டி அணிக்கு ஸ்ரேயாஷ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகிறார்கள்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற ருதுராஜ் அணி தற்போது 2ஆவது போட்டியில் பி அணியுடன் விளையாடி வருகிறது.

இதையும் படிக்க:செஸ் வரலாற்றில் முதல்முறை..! உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக கூகுள்!

சதமடித்த இஷான் கிஷன்

இதில் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 111 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

புஜ்ஜி பாபு தொடரிலும் முதல்போட்டியில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இல்லாதது, என பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வந்த இஷான் கிஷனின் பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிக்க:அதிரடி பேட்டிங்கின் ரகசியம் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

357 ரன்கள் குவிப்பு

மேலும் இந்த அணியில் பாபா இந்திரஜித் 78, சாய் சுதர்ஷன் 43, ரஜத் படிதார் 40, ருதுராஜ் ஜெய்க்வார் 46* ரன்கள் எடுத்துள்ளார்கள்.

இந்தப் போட்டியில் முதல்நாள் முடிவில் 357/5 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா பி அணியில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும் நவ்தீப் சைனி, ராகுல் சஹார் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024