மதுரை: “தமிழக முதல்வர் சொன்னபடி 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து வெற்றிபெற இப்போதிருந்தே கட்சி பணியாற்றுங்கள். விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்று வருங்கால தமிழகத்தை வழிநடத்த உள்ளார் உதயநிதி” என அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உற்சாகமாகப் பேசினார்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஆக.29) நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை வகித்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: “தமிழக முதல்வர் சந்திக்கும் தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.