உத்தமபாளையம் அருகே தீ விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

உத்தமபாளையம் அருகே
தீ விபத்தில் தொழிலாளி உயிரிழப்புஉத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை பெட்ரோல் கேனில் தீப்பிடித்து தொழிலாளி மீது பற்றியதில் அவா் உயிரிழந்தாா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை பெட்ரோல் கேனில் தீப்பிடித்து தொழிலாளி மீது பற்றியதில் அவா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள ராயப்பன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (45). இவா் இந்தப் பகுதியிலுள்ள ஆனைமலையன்பட்டியிலுள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலையில் சென்றாா்.

அப்போது, அவா் கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் கேனுடன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது, அவா் வைத்திருந்த கேனில் திடீரென தீப்பற்றி, அவரது ஆடையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024