உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூதாட்டி உயிரிழப்பு

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஹபீஸ்கஞ்ச் பகுதியில் 85 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். கணவன், மகன்களை இழந்த மூதாட்டி, மருமகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அருகே உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதியம் 1 மணியளவில் வீட்டிற்குள் நுழைத்த வாலிபர் ஒருவர், தனது மாமியார் என்றும் பார்க்காமல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டியின் மருமகள், வாலிபரை எச்சரித்ததை தொடர்ந்து, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியில் மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான முதாட்டி, உயிரிழந்தார்.

தொடர்ந்து, 35 வயதுடைய ராகேஷ் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் குடிகாரர் என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

Related posts

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல்; போலீசார் அதிரடி

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!