எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் நடிக்கவுள்ள நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் ஜூன் 8ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 2022 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான எதிர்நீச்சல் 744 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், எதிர்நீச்சல் -2 ல் நடிக்கவில்லை என மதுமிதா முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்தது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாச்சனா! போட்டியாளர்கள் அதிர்ச்சி!
யார் இந்த பார்வதி?
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான பார்வதி, சன் தொலைக்க்காட்சியில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடிகை தேவையானியுடன் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது, எதிர் நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தில் ஜனனி பாத்திரத்தில் நடிகை பார்வதி இணைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.