Tuesday, October 22, 2024

எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவம்தான் திராவிட மாடலின் அடிநாதம்: அமைச்சர் கோவி.செழியன்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

உயர்கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவேன் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வறியா உழைப்பாளியாக உழைத்து வருகிறார்.

ஏற்கனவே உயர்கல்வியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகம், இன்னும் மேன்மையுற மேல்நிலைக்கல்வியிலும், உயர்கல்வியிலும் புதிய, புதிய பாடத்திட்டங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை முதல்-அமைச்சர் செய்து வருகிறார்.

எனவே புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வி துறையை இன்னும் மேம்படுத்த, மேலும் பிரகாசமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை முதல்-அமைச்சர் அந்த துறையில் நியமித்து இருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம்.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024