எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்: கிரிக்கெட் வீரர் நடராஜன்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சேலம் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசும் போது, சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

மெட்ரோ 2ஆம் திட்ட நிதி- மத்திய அரசு விளக்கம்

இதை பயன்படுத்தி தன்னை போல் பலர் முன்னுக்கு வர வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் நம்பிக்கை தான் மூலதனம்.

நிறைய கஷ்டங்களை தாண்டிதான் நான் இங்கு வந்துள்ளேன். என்னைப்போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி மிக முக்கியம்.

சேலத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024