எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட் செய்திக் குறிப்பு:

உடல் நலக்குறைவால் 22.9.2024 அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப். 26) காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்: சித்தராமையா

எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார்.

இன்று (26.9.2024) சென்னை, கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024