Friday, September 20, 2024

எஸ்.சி., எஸ்.டி., இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்துக: பதவியேற்பில் முழக்கமிட்ட சசிகாந்த் செந்தில்

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

எஸ்.சி., எஸ்.டி., இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்துக: பதவியேற்பில் முழக்கமிட்ட சசிகாந்த் செந்தில்அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்கும் தமிழக எம்பிக்கள்.சசிகாந்த் செந்தில்சசிகாந்த் செந்தில்DOTCOM

மக்களவை உறுப்பினராக பதவியேற்கும் போது தலித், பழங்குடியினர் மீதான தாக்குதலை நிறுத்துக என்று தமிழக காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் முழக்கமிட்டார்.

18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நேற்றுமுதல் பதவியேற்று வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் வரிசையாக இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

அப்போது, அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற திருவள்ளூர் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், இறுதியில் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான கேவலமான தாக்குதலை நிறுத்துக என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்ட பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பிய நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர் குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி தமிழில் எம்பியாக பதவியேற்றுக் கொண்டனர்.

You may also like

© RajTamil Network – 2024