துபையிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபையிலிருந்து ஜெய்ப்பூருக்கு 189 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு சனிக்கிழமை (அக். 19) அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, விமானம் உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமானம் முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க:யாஹியா சின்வாா் படுகொலை! முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?
ஆனால், விமானத்தில் வெடிகுண்டோ சந்தேகத்திற்கிடமான பொருள்களோ இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது.
இந்த வாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் பெறப்பட்டதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.