Tuesday, October 1, 2024

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: வீடுகளில் முடங்கிய மக்கள்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: வீடுகளில் முடங்கிய மக்கள்

சேலம்: ஏற்காட்டில் கனமழையை தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனிப்பொழிவும் , கனமழையும் நீடித்து வருகிறது. கடந்த 9-ம் தேதி இரவு கனமழை கொட்டியது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று பகல் வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

ஏற்காடு நகர பகுதி, நாகலூர், மஞ்சக்குட்டை, படகு இல்லம், சேர்வராயன் கோயில், பகோடா பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையாக மூடுபனி நிலவியது. குளிரால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காககூட வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024