Saturday, September 21, 2024

ஐ.சி.சி தலைவராகும் ஜெய்ஷா? – வெளியான தகவல்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.சி.சி. தலைவர் பதவிக்காக போட்டியில் இருந்தும் அவர் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தேர்தலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஐ.சி.சி-யின் தலைவராக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024