புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இது குறித்து புதுதில்லியில் அவர் தெரிவித்தாவது:
தற்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது மற்றும் நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து வருகிறது. இதனால் முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது.
இதையும் படிக்க : 3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் சிஸ்கோ தலைவர் ஜான் சேம்பர்ஸ் தன்னிடம் முதலீட்டுக்காக 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்ளதாகவும், அதனை முதலீடு செய்ய இந்தியாவை விட வேறு சிறந்த இடம் இல்லை என்றார்.
இதனிடையில் உலகம் இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாக உற்று நோக்குகிறது என்றும் ஜான் சேம்பர்ஸ் கூறினார்.