ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது குறித்து புதுதில்லியில் அவர் தெரிவித்தாவது:

தற்போது பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது மற்றும் நாடு ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து வருகிறது. இதனால் முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது.

இதையும் படிக்க : 3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் சிஸ்கோ தலைவர் ஜான் சேம்பர்ஸ் தன்னிடம் முதலீட்டுக்காக 3 டிரில்லியன் அமெரிக்க டாலர் உள்ளதாகவும், அதனை முதலீடு செய்ய இந்தியாவை விட வேறு சிறந்த இடம் இல்லை என்றார்.

இதனிடையில் உலகம் இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாக உற்று நோக்குகிறது என்றும் ஜான் சேம்பர்ஸ் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024