Tuesday, September 24, 2024

ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

ஓடும் காரில் பெண் பாலியல் வன்கொடுமை!புகார் அளிக்க வந்தவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தேடி வருகின்றனர்

ஹைதராபாத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் வீட்டில் குடும்பத்தினருடன் பிரச்னை நடந்ததால், புகார் அளிப்பதற்காக பொல்லாரம் காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். புகார் அளித்துவிட்டு, மீண்டும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் செல்லும் வழியில் வேறு இருவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் ஆட்டோவில் ஏறிய இருவரும் அந்தப் பெண்ணை மிரட்டி, வேறொரு காரில் ஏற்றி அழைத்துச் சென்று, காரினுள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அதிகாலை 2.30 மணியளவில், அவர்களிடமிருந்து தப்பித்த அந்தப் பெண், அல்வால் காவல் நிலையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024