ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி… நூலிழையில் உயிர் தப்பினார்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளையை சேர்ந்தவர் செல்லத்தங்கம். இவர் தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல, திற்பரப்பு பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அவர் பஸ்சின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டிருந்தவாறு பயணம் செய்ததாக தெரிகிறது.

பத்பநாதபுரம் அருகே வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென செல்லத்தங்கம் கீழே விழுந்து தூக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்காமல் செல்லத்தங்கம் நூலிழையில் உயிர் தப்பினார். இதைக்கண்ட சக பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.

கீழே விழுந்த வேகத்தில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி