1
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் விடுமுறையை அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கனமழை: கூடுதல் மெட்ரோ ரயில்கள் – சேவையில் மாற்றம்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில், அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(அக். 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.