சென்னை: தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) காலமானார்.
முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் செப். 26, வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்படுகின்றன. அவருடைய உடலும் (காலை 10 மணியளவில்) சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்படுகிறது.
மறைந்த இராம.திரு. சம்பந்தம் உடலும் கொடையாகவே வழங்கப்பட்டது.