Friday, September 20, 2024

கமிந்து மென்டிஸ் சதம்.. இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

இலங்கை அணியின் 2-வது இன்னிங்சில் கமிந்து மென்டிஸ் 113 ரன்கள் குவித்தார்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் சுருண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கமிந்து மென்டிஸ் (52 ரன்), மிலன் ரத்னாயகே (7 ரன்) களத்தில் இருந்தனர். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அன்றைய நாளில் தினேஷ் சண்டிமால் (11 ரன்), பந்து தாக்கி விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிலன் ரத்னாயகே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து காயம் காரணமாக வெளியேறிய சண்டிமால் கமிந்து மென்டிசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் இலங்கை 300 ரன்களை கடந்தது.

அரைசதம் அடித்த சண்டிமால் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கமிந்து மென்டிஸ் சதமடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வரிசையில் யாரும் நிலைக்கவில்லை. இதன் மூலம் இலங்கை 2-வது இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024