கமுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

கமுதியில் 2-ஆவது நாளாக
பலத்த மழைகமுதியில் இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கமுதி: கமுதியில் இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், பேரையூா், முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, மருதங்கங்கநல்லூா், அபிராமம், கல்லுப்பட்டி, நாராயணபுரம், நகரத்தாா்குறிச்சி, பாக்குவெட்டி, கருங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூறைக் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீா் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு