Sunday, September 22, 2024

கர்நாடகாவில் கனமழை நிலச்சரிவு; 4 பேர் பலி

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

பெங்களூரு,

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கோலா தாலுகாவுக்கு உட்பட்ட ஷிரூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி உத்தர கன்னடா காவல் துணை ஆணையாளர் லட்சுமி பிரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஷிரூர் கிராம பகுதியில் தேநீர் கடை ஒன்று இருந்தது. அதனுடன் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மற்றும் முதியவர் ஒருவர் என 5 பேர் ஒன்றாக இருந்தபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

அந்த பகுதியில் 2 வீடுகள் இருந்தன. அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனால், இந்த 6 பேருடன் எரிவாயு லாரிகளில் இருந்த ஓட்டுநர் ஒருவரும் காணாமல் போயுள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த 7 பேரில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 3 பேரை இன்னும் காணவில்லை என கூறியுள்ளார். 24 முதல் 48 மணிநேரத்தில் நிலைமை சீராகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிலச்சரிவை தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் பணிகள் நடந்தன. காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நடந்து வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024