Saturday, September 21, 2024

கல்லூரி மாணவி தற்கொலை

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset
RajTamil Network

கல்லூரி மாணவி தற்கொலை கண்டமங்கலம் அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், மிட்டாமண்டகப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மகள் பவானி (21). இவா், புதுச்சேரியில் தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இந்த நிலையில், பவானி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024