கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழப்புபேரையூா் அருகே மதுபோதையில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே மதுபோதையில் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கீழத்திருமாணிக்கம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (57). இவா் வியாழக்கிழமை மதுபோதையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு டி.ராமநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக டி.ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024