Monday, September 23, 2024

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ.! 4 மாதங்களில் 6வது உறுப்பினர்!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ.! 4 மாதங்களில் 6வது உறுப்பினர்!கடந்த 4 மாதங்களில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த 6வது உறுப்பினர் யாதையா. காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ காலே யாதையாகாங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ காலே யாதையா

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியின் இன்று (ஜூன் 28) இணைந்தார்.

ஏற்கெனவே 5 எம்.எல்.ஏ.க்கள் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், தற்போது 6வது உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் இணைந்துள்ளார்.

தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ரங்காரெட்டி மாவட்டத்தின் செவெல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் காலே யாதையா. 62 வயதாகும் அவர், 2014ஆம் ஆண்டுமுதல் அத்தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

கடந்த 4 மாதங்களில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த 6வது உறுப்பினர் யாதையா.

இதற்கு முன்பு, கடந்த வாரத்தில் மட்டும் 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் உறுப்பினர்களும் 2023 டிசம்பர் மாதம் முதலே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த காலே யாதையா, 2018-ல் பிஆர்எஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றார். 2023-ல் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்று 3வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024