காமாக்யா கோயிலில் கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி விழா!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அஸ்ஸாமில் உள்ள காமாக்யா கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் நிலாச்சல் மலையின்மேல் அமைந்துள்ளது வரலற்றுச் சிறப்புமிக்க காமாக்யா திருக்கோயில். இங்கு நவராத்திரி விழா தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்க: நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

15 நாள்கள் நடைபெறும் துர்கா பூஜை திருவிழா நேற்று(செப். 26) அன்று தொடங்கியது, அர்ச்சகர்களின் ஸ்லோகங்கள் மற்றும் சடங்குகளுக்கு மத்தியில் துர்கா பூஜை வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

காமாக்யா கோயிலில் பதினைந்து நாள்கள் நடைபெறும் துர்கா பூஜை கிருஷ்ண நவமியில் தொடங்கி சுக்ல நவமி வரை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!

காமாக்யா கோயிலின் அர்ச்சகர் ஹிமாத்ரி சர்மா கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் காமாக்யா கோயிலில் துர்கா பூஜையானது வெவ்வேறு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சடங்குகளின்படி, துர்கா சிலை வழிபாடு இங்கு செய்யப்படுவதில்லை.

மேலும் இங்கு குமாரி பூஜை விசேஷமானது. முதல் நாளில் ஒரு குமாரியும், இரண்டாவது நாளில் இரண்டு என ஒன்பதாம் நாளில் ஒன்பது குமாரிக்குப் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இதையும் படிக்க: இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

நாட்டின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயிலில் அம்மனின் யோனிப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடமாகத் திகழ்கிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலுக்குச் சென்று வருவதாகவும், இங்குச் செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024