Sunday, October 27, 2024

கார் டயர் வெடித்து விபத்து: 9 மாத குழந்தை பலி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சேலம்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது. படுகாயமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த காரின் திடீரென வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மேம்பால சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க |மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

இதில், காரில் இருந்து 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. குழந்தையின் பெற்றோர்கள் தீபக் அழகப்பன் மற்றும் தெய்வானை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024